இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தலைமையகத்துக்கு விஜயம்

மேஜர் ஜெனரல் யு சுரேஷ் குமார் ( Major General U. Suresh Kumar) தலைமை கொண்ட இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மூத்த அதிகாரிகள் 16 பேர் இன்று (ஆகஸ்ட் 27) கடற்படை தலைமையகத்துக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளனர்.

அதன்படி வருகை தந்த பிரதிநிதிகள் குழுவின் தளபதி மேஜர் ஜெனரல் யு சுரேஷ் குமார் , கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்து உரையாடினார். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு குறித்து தூதுக்குழுவை விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல உட்பட கடற்படை தலைமையகத்தின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.