முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா கடற்படைத் தளபதியடன் சந்திப்பு

முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று (ஆகஸ்ட் 28) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். இந் நிகழ்வுக்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்களும் கலந்து கொண்டார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.