கேரள கஞ்சா 2 கிலோ 650 கிராமுடன் மூன்று நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி மன்னார், உதயபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2 கிலோ 650 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து மன்னார், உதயபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று பேரை காணப்பட்டது. குறித்த நபர்களை மேலும் சோதிக்கும் போது இரண்டு பொதிகளாக இருந்த குறித்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18,26 மற்றும் 43 வயதான உதயபுரம், மன்னார், பேசாலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், குறித்த சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.