100 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

இரனைதீவு பகுதிகளில் 2019 செப்டம்பர் 01 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை பீடி இலைகளை மீட்டது.

அதன் படி, வட மத்திய கடற்படை கட்டளை மூலம் இரனைதீவில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 100 கிலோகிராம் எடை கொண்ட பீடி இலைகள் பொதிகளை கண்டெடுத்துள்ளது. பீடி இலை தொகை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணத்தின் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளது.

மேலும், கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாரான நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்களுக்கு தனது நடவடிக்கைகளைத் தொடர முடியவில்லை. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க கடற்படை எச்சரிக்கையாக உள்ளது.