தடைசெய்யப்பட்ட 14.4 கிலோகிராம் மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 14.4 கிலோகிராம் அங்கீகரிக்கப்படாத வலைகளைக் கொண்ட ஒருவரை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

அதன்படி வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடத்திய சோதனையின் போது விற்பனைக்காக வைத்திருந்த போது இவ்வாரு கைது செய்யப்பட்டன. மேலதிக விசாரணையின் போது கன்காசன்துரையில் வசிக்கும் 38 வயதான இவரிடம் இருந்த 14.4 கிலோகிராம் சட்டவிரோத மீன்பிடி வலைகளும் மீட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டவிரோத வலைகள் மற்றும் சந்தேகநபர் யாழ்ப்பாணம் மீன்வள இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.