சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 செப்டம்பர் 3 ஆம் திகதி கல்முனை சயிந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின் போது 10 பாக்கெட் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கல்முனை போலீஸ் ஏஎஸ்பி அலுவலகம் இனைந்து நடத்திய சோதனையின் போது 10 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு 200 சிகரெட்டுகளை போலீசார் மீட்டுள்ளனர் மற்றும் அவற்றை விற்றதற்காக தயாராக இருந்த போது இவ்வாரு கைது செய்யப்பட்ன.

கைது செய்யப்பட்ட நபர்கள் சயிந்தமருது மற்றும் மலைகாடு பகுதியில் வசிக்கின்ற 30 மற்றும் 31 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டரியப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கல்முனை போலீஸ் ஏஎஸ்பி அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.