சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியில் இருந்த 02.16 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிட்டிக்க கடற்படை உதவியது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 செப்டம்பர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வைத்து 02.16 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளன.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாணம் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காரைநகர் பகுதி சாலையில் நிருத்திவைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று காணப்பட்டது. அங்கு முச்சக்கர வண்டியை சோதிக்கும் போது அங்கு மறைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

கேரள கஞ்சா கொண்டு செல்லப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் தேடல் காரணமாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்படி, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி மற்றும் கேரள கஞ்சா ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.