சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் ஆதரவு வழங்கியது

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (செப்டம்பர் 04) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

மேற்படி "சஜித் புதா" மீன்பிடி படகின் மீனவர் தொடர்பாக மீன்பிடி மற்றும் நீர்வள திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் மூலம் குறித்த மீனவர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டன.

கடற்படை படகின்மூலம் காலி கலங்கரை விளக்கிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் சென்று முதலுதவிகள் அளிக்கப்பட்டு, கடற்படை படகின் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்கென உடனடியாக கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.