‘தளபதி கோப்பை’ படகோட்டம் போட்டித்தொடர் திருகோணமலையில் தொடங்குகிறது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி தொடர்ச்சியாக 2 வது ஆண்டாக ஏற்பாடு செய்த தளபதி கோப்பை படகோட்டம் போட்டித்தொடரின் திறப்பு விழா 2019 செப்டம்பர் 4 ஆம் திகதி திருகோணமலை சாண்டிபே கொமான்டர் சாந்தி பஹார் நினைவு படகோட்டம் சமூக வளாகத்தில் தொடங்கியது.

இநதப் போட்டித் தொடருக்காக பங்களாதேஷின் மற்றும் இந்திய கடற்படை அகாடமிகள் கல்வியாளர்கள், இலங்கை ராணுவ இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி ஆகியவற்றின் பயிற்சியின் கீழ் உள்ள அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வு செப்டம்பர் 8 ஆம் திகதி வரை அழகிய திருகோணமலை சாண்டி பே கடற்கரை பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளை அதிகாரி கமடோர் கலன ஜினதாச உட்பட மூத்த அதிகாரிகள், ஏராளமான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.