கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் கடற்படை தொடங்கியது

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் சுத்தம் செய்யும் திட்டங்களில், மற்றொரு திட்டம் இன்று செப்டம்பர் 05 ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தின் மூலம் கடற்கரையை சுத்தம் செய்யவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பெரிய அளவிலான குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பசுமை நீல கருத்தின் கீழ் ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் கடற்படை வீரர்கள் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நடத்துகின்றனர்.