750 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் கல்முனை கலால் அலுவலகம், இனைந்து 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 750 கிராம் கேரள கஞ்சா கொண்ட மூன்று நபர்களை கைது செய்தனர்.

அதன் படி தென் கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கல்முனை கலால் அலுவலகம் இனைந்து அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 750 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த நபர்களை கைது செய்யப்பட்டனர். மேற்கொன்டுள்ள மேலதிக விசாரணையின் போது இந்த கேரள கஞ்சா விற்பனைக்காக தயாராக இருந்ததாக தெரியவந்ததுடன், அங்கு சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளும் கடற்படையால் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா ஆகிய மேலதிக விசாரணைகளுக்காக அம்பாரை கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.