கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை நிலையத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர விநாயகர் பூஜை 2019 செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தெருக்களில் பிரமாண்டமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இந் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, , ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க, கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளை, கட்டளை மூத்த அதிகாரிகள், துறைகளின் தலைவர்கள், மூத்த, இளைய மாலுமிகள் மற்றும் கடற்படை குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த வண்ணமயமான விழா இப்பகுதியில் வாழும் இந்து பக்தர்களுக்கு திறந்திருந்ததுடன் இது சமூகங்களிடையே மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு வழி வகுத்தது. மேலும், வெவ்வேறு நம்பிக்கைகளின் நிகழ்வுகளை ஊக்குவிப்பதில் கடற்படையின் உதவியை இது சித்தரித்தது.