வடமேற்கு கடற்படை கட்டளையில் புதிதாக தகவல் தொழில்நுட்ப மையம் திறப்பு

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு பொறுப்பான தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இன்று (செப்டம்பர் 10, 2019) வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிதாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதன்படி, கணினி பழுதுபார்க்கும் வசதிகளுடன் கூடிய இந்த தகவல் தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழாவில் வடமேற்கு கடற்படை கட்டளைத் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.