பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சோமுத்ரா அவிஜன்” வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படுகிறது

செப்டம்பர் 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சோமுத்ரா அவிஜன்” இன்று (10 செம்பர்) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை வழக்கமாக மரியதைகளை செலுத்தியது.

நான்கு நாள் சுற்றுப்பயணத்தில் இருந்த கப்பலின் குழு உறுப்பினர்கள், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் சுவாரஸ்யமான இடங்களுக்கு விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இந்த நட்பு சுற்றுப்பயணம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் கடற்படைக்கு இடையிலான நட்பையும் மேம்படுத்தியதுடன், அறிவு மற்றும் அனுபவ பரிமாற்றத்தையும் மேம்படுத்தியது.