‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிகையாளர் சந்திப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சோனியா கோட்டெகோட 2019 செப்டம்பர் 14 ஆம் திகதி நெலும் பொகுன அரங்கில் நடைபெறவிருக்கும் ‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி அருந்ததி உதிதமலா ஜெயநெத்தி மற்றும் ராணுவம், விமானப்படை, காவல் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த இசை நிகழ்ச்சி போர்வீரர்களின் நலனுக்காக நிதி திரட்டுவதில் கவனம் செலுத்துகிறது. முத்தரப்பு சேவைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையின் சேவா வனிதா அலகுகளின் உதவியுடன் பாதுகாப்பு அமைச்சக சேவா வனிதா பிரிவு இந்த முயற்சியை ஏற்பாடு செய்துள்ளது.மேலும் பிரபல இசைக்கலைஞர்ள் இந் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.