கேரள கஞ்சாவுடன் 07 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 செப்டம்பர் 10 ஆம் திகதி மன்னாரில் உள்ள எலுத்தூர் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஏழு (07) பேர் கைது செய்யப்பட்டனர்.

மன்னாரில் உள்ள எலுத்தூர் பகுதியில்,பொலீஸ் ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் குழு ஒன்றை கண்கானித்தது. அதன்படி, அங்கு சந்தேக நபர்களை பரிசோதிக்கும் போது, கேரள கஞ்சா 100.2 கிராம் மீட்கப்பட்டு, நபர்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் 20 முதல் 29 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என்று அடையாலம் காணப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் அவர்களும் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்காக கடற்படை தேடல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது.