இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (2019 செப்டம்பர் 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இங்கு வருகை தந்த இராணுவத் தளபதியை கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன் இச் சந்திப்பு இராணுவத் தளபதி இராணுவத் தளபதியாக கடமையேற்ற பின் கடற்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பாகும்.

அங்கு புதிய இராணுவத் தளபதி அவர்களுக்கு கடற்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் நாயகங்கள் உட்பட பல மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.