தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் உடப்புவ, முண்தலம பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 16, அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபரை வடமேற்கு கடற்படை கட்டளை, முண்தலம பகுதியில் நடத்திய ரோந்துப் பிரிவின் போது கைது செய்தது. தடைசெய்யப்பட்ட வலையையும், பதிவு செய்யப்படாத சிறிய படகையும் கடற்படை பறிமுதல் செய்ததுடன் அங்கீகரிக்கப்பட்ட வலைகள், சிறிய படகு மற்றும் சந்தேநபர் புத்தலம் மீன்வள இயக்குநரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.