ஊரகஸ்மன்சந்தி ஹோரவல பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை மீட்க கடற்படை உதவி

ஊரகஸ்மன்சந்தி ஹோரவல பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு மோட்டார் சைக்கிள்களை மீட்க இலங்கை கடற்படை உதவியுள்ளது.

ஊரகஸ்மன்சந்தி ஹோரவல ஆற்று ஊடாக பயணிக்கும் படகு கவிழ்ந்த காரணமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 பேர் நீரில் முழ்கியதுடன் அப்பகுதியில் வசிப்பவர்களினால் இவர்களை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை நீரிலிருந்து மீட்டெடுக்க கடற்படை நீர்முழ்கி குழுவின் உதவியை ஊரகஸ்மன்சந்தி போலீசார் கோரினர்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு நிர்முழ்கி குழு அந்த இடத்திற்கு சென்று இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர், மீட்டெடுத்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஊரகஸ்மன்சந்தி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.