உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து ஆம் 21 செப்டம்பர் 2019 திகதி பொத்துவில் லாகுகல பகுதியில் நடத்திய சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

பொத்துவில் லாகுகல பகுதியில் தென்கிழக்கு கடற்படை மற்றும் பொத்துவில் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதன்படி, லாகுகலவிருந்து பொத்துவிலுக்கு கஞ்சாவை கொண்டு செல்லும்போது குற்றவாளி கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணையில் அவர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என்பதும் சந்தேகநபர் 43 வயதானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் கஞ்சாவுடன் பொத்துவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், அத்தகைய பொருட்களை தங்கள் வசம் வைத்திருப்பவர்களையும் கைது செய்வதற்காக கடற்படை தீவு முழுவதும் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.