சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்களை திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரினால் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம், திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் படகொன்று கண்கானிக்கப்பட்டதுடன் குறித்த படகை சோதனை செய்யப்பட்டது. மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் மீன்பிடிக் கப்பல் மீன்பிடிக்க பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு சட்டவிரோதமான வலையொன்றும் கைது செய்யப்பட்டது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் கடற்படை கைப்பற்றியதுடன் குறித்த நபர்கள் 25 மற்றும் 27 வயதுடைய மூத்தூர் பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டது. அதன் படி கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.