கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து இன்று ( 2019 செப்டம்பர் 23) மன்னார் எலுத்தூரில் பகுதியில் நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

அதன் படி வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து மன்னார் எலுத்தூரில் பகுதியில் நடத்திய சோதனையின் போது 50 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது. குறித்த சந்தேகநபர் கேரள கஞ்சாவை விற்கத் தயாரானபோது கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் தல்பாடு பகுதியில் வசிக்கும் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் போதைப் பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.