தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையால் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கடியவெல்ல கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 06 பேரை 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் கடியவெல்ல கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இந்த 06 நபர்களையும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த காரணத்தினால் இவ்வாரு கைது செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் 28 முதல் 45 வயது வரையிலான இச்சலம்பத்து பகுதியில் குடியிருப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு சொந்தமான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை, டிங்கி படகு மற்றும் வெளிப்புற மோட்டார் ஆகியவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி சாதனங்களுடன் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.