சட்டவிரோத மீன்பிடித்தல் குறித்து கடற்படையினருக்கான விழிப்புணர்வு திட்டம்

சட்டவிரோத மீன்பிடித்தல் குறித்து கடற்படையினருக்கான விழிப்புணர்வு திட்டம் கிழக்கு கடற்படை கட்டளை ஆடிட்டோரியத்தில் 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெற்றது.

'சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளை நீக்குதல்' என்ற தலைப்பில் மீன்வள மற்றும் நீர்வளத் துறையால் இந்த பட்டறை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இலங்கை கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய இயக்குநரின் உதவியுடன் கடற்படையின் 4 வது விரைவான தாக்குதல் படகு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த பட்டறை மீன்வள மற்றும் நீர்வளத் துறையின் உதவி இயக்குநர் (பயிற்சி), ஆர்.எஸ்.ஏ, ரத்சர பண்டார அவர்கள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடிக்காக சட்டத்தை அமல்படுத்துவது குறித்து கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புத் துறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பட்டறையின் நோக்கமானது.

இந்த பட்டறையில் கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் இணைக்கப்பட்ட ஏராளமான மாலுமிகள் கலந்து கொண்டனர்.