சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

பொலிஸ் அதிரடிப்படை உடன் இணைந்து கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 2019 செப்டம்பர் 27 அன்று காலியில் உள்ள தேவாட்டாவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவரை கைதுசெய்தனர்.

தெற்கு கடற்படை கட்டளை மற்றும் ஹியாரே போலீஸ் அதிரடிப்படை உதவியுடன் காலியின் தேவாட்டா பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை நடத்தியது. இதன்போது ஒரு வீட்டில் இருந்து 6,560 சட்டவிரோத சிகரெட்டுகளை கண்டுபிடித்துள்ளதுடன் 48 வயதான வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.