நிகழ்வு-செய்தி

கடற்படை தெற்கு கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டது

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம், தீவின் மணல் கடற்கரைகளைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு, இன்று (செப்டம்பர் 27, 2019) தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரைகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

28 Sep 2019

பண்டத்தரா பாலத்தின் கீழ் அடைப்பை அகற்ற கடற்படை நடவடிக்கைகள்

மாத்தரையில் உள்ள பண்தத்தரா பாலத்தின் கீழ் உள்ள அடைப்பை அகற்ற 27 செப்டம்பர் 2019 அன்று கடற்படை நடவடிக்கை எடுத்தது. பாலத்தின் அடிப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, குப்பைகள் மற்றும் மரங்களின் கிளைகளை சேகரித்ததன் விளைவாக, இப்பகுதியில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.

28 Sep 2019

கடற்படையின் இன்டர்-கமாண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

இலங்கை கடற்படை இன்டர்-கமாண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி கிழக்கு கடற்படை கட்டளை டென்னிஸ் கோர்ட்டில் 27 செப்டம்பர் 2019 அன்று நடைபெற்றது. கிழக்கு கடற்படை பகுதி தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

28 Sep 2019

வெளிநாட்டு கடலோர காவல்படை பணியாளர்களுக்கான VBSS பாடநெறி திருகோணமலையில் நடந்து முடிந்நது.

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (யு.என்.ஓ.டி.சி) இணைந்த கடலோர காவல்படை பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட விசிட் போர்டு தேடல் மற்றும் பறிமுதல் VBSS பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலை சிறப்பு படகு படை (எஸ்.பி.எஸ்) பயிற்சி பள்ளியில் 27 செப்டம்பர் அன்று நடைபெற்றது.

28 Sep 2019

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

பொலிஸ் அதிரடிப்படை உடன் இணைந்து கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 2019 செப்டம்பர் 27 அன்று காலியில் உள்ள தேவாட்டாவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவரை கைதுசெய்தனர்.

28 Sep 2019

வடக்கு கடலில் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 743.8 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

வடக்கு கடலில் கடற்படையினர் 2019 செப்டம்பர் 27 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு கடத்தல்காரர்கள் 27 பொதி பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், அடுத்து கடற்படையின் தேடுதல் நடவடிக்கை அதே கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது, இதன் விலைவாக கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கே உள்ள கடல்களில் மேலும் 12 பீடி இலை பொதிகள் கடற்படையினால் கண்டுபிடிக்க முடிந்தது.

28 Sep 2019

கடற்படை வடக்கு கட்டளையில் கடற்கரை சுத்தம் செய்யும் மற்றுமொரு வேலைத்திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 செப்டம்பர் 27 அன்று வடக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

28 Sep 2019