கடற்படை தெற்கு கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டது

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம், தீவின் மணல் கடற்கரைகளைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு, இன்று (செப்டம்பர் 27, 2019) தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரைகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இவ் வேலைத்திட்டம் காலியில் உள்ள மகாமோதர கடற்கரை மற்றும் தங்கல்லையின் கடற்கரையில் தொடங்கப்பட்டது. கடற்படை வீரர்கள் இந்த கடற்கரைகளை சுத்தம் செய்து, பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் குப்பைகளை அப்புரப்படுத்தினர்.

தீவைச் சுற்றியுள்ள கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாத்து, அதை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாததாக்குவது பொதுமக்களின் பொறுப்பாகும். இதற்கிடையில், கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கடற்படை எப்போதும் தனது பணியில் உறுதியாக உள்ளது. ‍‍‍