சட்டவிரோதமாக குடியேற முயன்ற இரண்டு நபர்களை கடற்படை கைது செய்தது

சட்டவிரோதமாக நாட்டிற்கு குடிபெயர முயன்ற இருவரை இலங்கை கடற்படை 2019 செப்டம்பர் 28 அன்று மன்னாரில் உள்ள உருமலையில் கைப்பற்றியது.

மன்னாரில் உருமலை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை வட மத்திய கடற்படை கட்டளை கண்டுபிடித்ததுள்ளதுடன் கடற்படை வீரர்கள் நடத்திய விசாரணையின்படி, அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் வழியாக குடியேற முயன்ற நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த நபர்கள் 2008 ல் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, சந்தேக நபர்கள் தலைமன்னாரில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் “தம்மென்னா” விற்கு எடுத்து செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியக் படகு கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.