தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் திருகோணமலை பூனடி பகுதியில் வைத்து இன்று ( அக்டோபர் 01) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்களை திருகோணமலை பூனடி பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 24 முதல் 53 வயது வரையிலான மாவடிசேனை மற்றும் ஈசலம்பத்து பகிதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன. அங்கு அவர்களிடமிருந்து ஒரு தடைசெய்யப்பட்ட வலை, இரண்டு டிங்கி படகுகள், இரண்டு வெளிப்புற இயந்திரங்கள் மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றியது. டிங்கி படகு, வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.