சட்டவிரோதமாக கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் கொண்டு சென்ற ஏழு பேர் கடற்படையினரினால் கைது

மன்னார் தால்பாடு கடல் பகுதியில் வைத்து 04 கிலோ கிராம் கடல் அட்டைகள் மற்றும் 03 சங்குகள் சட்டவிரோதமாக கொண்டு சென்ற ஏழு பேரை கடற்படையினர் 2019 அக்டோபர் 04 ஆம் திகதி கைது செய்தனர்.

அதன் படி, வட மத்திய கடற்படை கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் கொண்டு சென்ற காரணத்தினால் இவர்களை இவ்வாரு கைது செய்யப்ட்டன. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற இயந்திரம் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மன்னார் தால்பாடு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும், அவர்கள் 26 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் எனும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.