அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையால் கைது

2019 அக்டோபர் 5 ஆம் திகதி திருகோணமலை மொஹொத்துவாரம் கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேரை கடற்படை கைப்பற்றியது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் திருகோணமலை மொஹொத்துவாரம் கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த 07 பேரை கைது செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடமிருந்து இரண்டு டிங்கி படகுகள் மற்றும் நீர்மூழ்கி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்ற பொருட்களும் கைதுசெய்யப்பட்டன. சந்தேக நபர்கள் 25 முதல் 48 வயதுக்குட்பட்ட திருகோணமலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாரு கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மற்றும் நீர்மூழ்கி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.