தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் திருகோணமலை சிநன்வேலி கடல் பகுதியில் வைத்து 2019 அக்டோபர் 05 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்களை திருகோணமலை சிநன்வேலி கடல் பகுதியில் மற்றும் வலைதோட்டம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 19 முதல் 48 வயது வரையிலான கின்னியா மற்றும் மொஹொத்துவாரம் பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன. அங்கு அவர்களிடமிருந்து 04 தடைசெய்யப்பட்ட வலைகள், 04 டிங்கி படகுகள், 04 வெளிப்புற இயந்திரங்கள் மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டது. குறித்த டிங்கி படகுகள், வலைகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படன.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.