போதைப்பொருள் கடத்திய நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

ராகமவில் 2019 அக்டோபர் 10 ஆம் திகதி ஹெரோயினுடன் நபரொருவரைகடற்படை மற்றும் பொலீஸ் சிறப்பு பணிக்குழு கைது செய்துள்ளது.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளை மற்றும் பொலீஸ் சிறப்பு பணிக்குழுவின் சிறப்பு குற்றப்பிரிவு நடத்திய சோதனையின் போது, கடவத்தையிலிருந்து ராக வரை சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி கண்காணிக்கப்ட்டு சோதனை செய்யப்பட்ட போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் மற்றும் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய சில சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் ராகமாவில் வசிக்கும் 28 வயதுடையவராக அடையாலம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், முச்சக்கர வண்டி, சீருடை மற்றும் ஹெரோயின் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.