இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித தாக்குதல் படகொன்று மூலம் கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இலங்கை பிராந்திய கடலில் சட்டவீரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்த இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்படை தளமான இலங்கை கடல்படை கப்பல் ‘உத்தர’ நிருவனத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 31 முதல் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துகளின் விளைவாக, இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் எல்லா நேரங்களிலும் கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்.