தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை, செம்மாலை மற்றும் போடுவாக்கட்டு ஆகிய கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 பேரை 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் திருகோணமலை, செம்மாலை மற்றும் போடுவாக்கட்டு ஆகிய கடல் பகுதிகளில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கைகளின் போது, இந்த 19 நபர்களையும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த காரணத்தினால் இவ்வாரு கைது செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் 19 முதல் 65 வயது வரையிலான இவர்கள் கோகிலாய், மதுரங்குலிய, நீர்கொழும்பு, குச்சவேலி, தம்புத்தேகம மற்றும் திருகோணமலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு சந்தேக நபர்களின் வசம் இருந்து நான்கு தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், நான்கு டிங்கி படகுகள், நான்கு வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன். கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி சாதனங்களுடன் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.