சட்டவிரோத 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (2019 அக்டோபர் 17) காலை அறிப்பு கிழக்கு கடல் பகுதியில் வைத்து 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்களை கடற்படை கைது செய்தது.

அதன் படி, வடமேற்கு கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடுக்கையின் போது, அனுமதி இல்லாமல் சேகரிக்கப்பட்ட இந்த கடல் அட்டைகள் கைது செய்யப்பட்டது. இரு டிங்கிகள், இரு வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 53 வயதுடைய இந்த பகுதியில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், டிங்கிகள், வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள், மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மன்னார் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.