சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி சிலாவத்துர, அரிப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் சிலாவத்துர, அரிப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, 70 மி.மீ க்கு குறைவான விட்டம் கொண்ட 148 சங்குகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேகநபர் 30 வயதான அரிப்பு பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாரு குறித்த சங்குகளை விற்பனை செய்யும் போது கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. சந்தேகநபர் மற்றும் ஓடுகளை மேலதிக விசாரணைகளுக்காக சிலாவத்துர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின்படி, 70 மி.மீ க்கு குறைவான விட்டம் கொண்ட சங்கு களை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்துடன் வாங்குவது, காண்பிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.