தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

கல்லடி கடற்கரையில் மற்றும் திருகோணமலை பல்செனை கடற்கரையில் கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் மட்டக்களப்பு, மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் இனைந்து 2019 அக்டோபர் 19 அம் திகதி மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார். 55 வயதான இவர் சிலமுனையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய பதிவு செய்யப்படாத சிறிய படகொன்று மற்றும் 12 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த கட்டளை மூலம் பல்செனை கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு 02 மீன்பிடி படகுகள், 02 வெளிப்புற மோட்டார்கள், சட்டவிரோதமாக பிடித்த 300 கிலோ கிராம் மின் மற்றும் தடைசெய்யப்பட்ட வலையொன்றும் கைது செய்யப்பட்டது. மேலும் இந்த மீன்களை வாங்க லாரி வண்டி மற்றும் கேப் வண்டியில் வந்த மூன்று வாடிக்கையாளர்களையும் கடற்படை கைது செய்தது.

கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள், மீன்பிடி வலைகள், லாரி வண்டி, கேப் வண்டி மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் குறித்து மட்டக்களப்பு மீன்வளத்துறை உதவி பணிப்பாளரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.