தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

புல்முடை மற்றும் பொடுவக்கட்டு பகுதிகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் இன்று (2019 அக்டோபர் 20) புல்முடை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகொன்று, வெளிப்புற மோட்டார் மற்றும் ஒரு தடைசெய்யப்பட்ட வலை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் புரநியார் பகுதிகளில் வசிக்கின்ற 18 மற்றும் 28 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்./p>

மேலும் குறித்த கட்டளை மூலம் இன்று பொடுவக்கட்டு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு ஒரு மீன்பிடி படகு, ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் 02 தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை பகுதிகளில் வசிக்கின்ற 23 மற்றும் 38 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள், மீன்பிடி வலைகள், மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் குறித்து திருகோணமலை மீன்வளத்துறை உதவி பணிப்பாளரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.