காலி கலந்துரையாடல் 10 வது சர்வதேச கடல்சார் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 21) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது. இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உட்பட 55 நாடுகளில் பிரதிநிதிகள், 12 சர்வதேச நிறுவனங்களிள் பிரதிநிதிகள் மற்றும் 03 பாதுகாப்பு துறை பொருட்கள் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாடுக்காக கலந்துகொண்டு இருக்கின்றனர்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா இதயங்கனிந்த வரவேற்பை நல்கினார். இச் சர்வதேச கடல் மாநாட்டில் தலைமை விருந்தினராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து கொண்டார். “நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான மனநிலையை சுத்திகரித்தல்: தசாப்தத்தின் மறுஆய்வு” என்ற தொனிப் பொருளில் கீழ் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டின் வெளிநாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் தங்களுடைய விரிவுரைகள் வழங்க உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் கீழ் 2010 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை முதல் சர்வதேச கடல்சார் மாநாடு காலியில் நடத்தியது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாராட்டப்பட்ட தூய்மைவாதிகளுக்கு கடல்சார் பாதுகாப்பு பற்றி விவாதிக்கக்கூடிய பொதுவான தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கமானது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய பெருங்கடல் முழுவதும் ஆயுத கடத்தல், கடற்கொள்ளை, மனித கடத்தல், கடல்வழி பயங்கரவாதம், மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவையான கடல்சார் பாதுகாப்பை அச்சுறுத்தும் பல நடவடிக்கைகள் வளர்ந்து வருவது காணப்பட்டது. இது கடல்சார் நடவடிக்கைகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படை கடல்வழி பயங்கரவாதம் ஒழிப்பிற்தல் மற்றும் இந்திய பெருங்கடலில் கடல்சார் நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்தலுக்காக தன்னுடைய கடமைகள் மேற்கொன்டுள்ளது.

அத்தகைய பின்னணியில் வளர்ந்து வரும் கடல்வழி பொதுவான சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள வலுவான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை ஆண்டுதோறும் குறித்த மாநாடு நடத்துகிறது.

குறித்த சர்வதேச மாநாட்டில் முதல் நாள் அமர்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட ஜனாதிபதியின் செயலாளர் உதய ரஞ்சித் செனவிரத்ன, தூதர்கள், உயர் ஸ்தானிகர்கள், பாதுகாப்பு செயலாளர், (ஓய்வு) சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், ஆகியொர் உட்பட அரசாங்கத்தில் மற்றும் ஆயுதப்படைகளிள் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.