வெத்தலைக்கேணி பகுதியில் கடற்படை வீரர்களால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது

கடற்படையின் உதவியுடன் வெத்தலைக்கேணி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 23 ஆம் திகதி வடமாரச்சி உதவி பிரதேச செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களால் திறக்கப்பட்டது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முன் பள்ளி நிர்மானிக்கப்பட்டது. இந்த முன்பள்ளியைக் கட்டியெழுப்புவதில் பங்களித்தமைக்காக உதவிப் பிரதேச செயலாளரும், அப்பகுதி மக்களும் கடற்படைத் தளபதி உடபட முழு கடற்படைக்கு தங்களுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

இந் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை ‘வெத்தலைக்கேணி’ நிறுவனத்தின் கடற்படை பணியாளர்கள் மற்றும் வடமராச்சி பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.