சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு நபர்கள் (08) கடற்படையினரால் கைது

திருகோணமலை, உப்பாரு கடல் பகுதியில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு நபர்களை (08) கைது செய்யப்பட்டது.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம், திருகோணமலை, உப்பாரு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, இந்த 08 சந்தேக நபர்களும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 43 வயதுடைய கின்னியா மற்றும் சீனா துறை முகம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு ஒரு படகு, ஒரு வெளிப்புற மோட்டார், அங்கீகரிக்கப்படாத ஒரு மீன்பிடி வலை மற்றும் பிடிக்கப்பட்ட 45 கிலோ கிராம் கடற்படை கைப்பற்றியது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீன்பிடி படகு, வெளிப்புற மோட்டார், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை, பிற மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பிடிக்கப்பட்ட மீன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்துர் மீன்வள இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.