இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு கொழும்பில்

இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு , 2019 அக்டோபர் 25அன்று கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

அதன்படி, இலங்கை கடற்படை, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் காம்சோ லோட்ஸ்டார் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கருத்தரங்கு நடைபெற்றது. பிற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்வதற்கான பொதுவான தளத்தை உருவாக்குதல் இந்த கருத்தரங்கில் நோக்கமானது. இங்கு கடற்படைத் தளபதி மன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் தொடங்கினார்.

ශஇலங்கை பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் திரு. டீ. எம் பல்லேவத்த, பேராதெனிய பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் எஸ்.பதிரன, கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள், பொறியியல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.