சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏலு நபர்கள் (07) கடற்படையினரால் கைது

பூங்குடுதீவு, குரிகட்டுவன் ஜெட்டி பகுதியில் 2019 அக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏலு நபர்களை (07) கடற்படையால் கைது செய்யப்பட்டது.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம், பூங்குடுதிவ், குரிகட்டுவன் ஜெட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, இந்த 07 சந்தேக நபர்களும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களை சோதனைக்கு உற்பத்திய போது சட்டவிரோதமாக பிடித்த 70 சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 04 மீன்பிடி படகுகள், 04 வெளிப்புற மோட்டார்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 03 மீன்பிடி வலைகள் கடற்படை கைப்பற்றியது. குறித்த சந்தேகநபர்கள் 24 மற்றும் 51 வயதுடைய ஊர்காவற்துறை, நெடுந்தீவு, பூங்குடுதீவு மற்றும்நாநட்டான் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளின் பயன்பாடு இலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடல்களில் மீன் மற்றும் கடல் வளங்களை அழிக்க அச்சுறுத்துகிறது எனவே, இந்த சட்டவிரோத மீனவர்களை கைது செய்ய கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.