கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

2019 அக்டோபர் 27 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை (02) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

குறித்த ஒரு நாள் மீன்பிடி படகு 2019 அக்டோபர் 19 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகாக சிலாபம் மீன்பிடி துறைமுகத்தை விட்டு கடலுக்கு புறப்பட்டதுடன் கடலில் வைத்து வெளிப்புற எரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள செயல்நீக்கத்தினால் இரண்டு மீனவர்களும் கடலில் சிக்கிக்கொண்டனர். விபத்து பற்றிய தகவல்கள் கிடைத்த விரைவில் கடற்படை தலைமையகத்தில் வழிகாட்டுதலின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை படகொன்று மீனவர்கள் மீட்பு செயல்பாடுகளுக்காக சென்றுள்ளது

அதன் படி, வட மேற்கு கடல் பகுதியில் சிக்கித் தவித்த இந்த மீனவர்களை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது. மீனவர்கள் பாதுகாப்பாக கல்பிட்டியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு புத்தலம் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.மேலும், இலங்கை கடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.