இலங்கை கடற்படை கப்பல் “மஹாநாக” தனது 06 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

தென் கிழக்கு கடற்படை கட்டளை தளமான “மஹாநாக” தனது ஆறாவது ஆண்டு நிறைவு விழாவை இன்று (2019 அக்டோபர் 28) திகதி பெருமையுடன் கொண்டாடுகிறது.

அதன்படி, நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, கொமாண்டர் உதய குமார உட்பட குழுவினர் ஆண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடினார்கள். கடந்த சில நாட்களில், நட்பு கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன இன்று காலை பிரிவுகளை ஆய்வு செய்த பின்னர் கட்டளை அதிகாரி கப்பலின் தளம் குறித்து உரையாற்றினார்.

இந் நிகழ்வு கட்டளை அதிகாரி, தலைமை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களுக்கு உறையாடி முடந்தவுடன் விருந்து வழங்கிய பின்னர் நிறைவடைந்தது. இந் நிகழ்வுக்காக தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில மற்றும் கட்டளையின் துறை பிரதானிகள் கழந்து கொண்டனர்.