போதைப்பொருள் தடுப்பில் மற்றுமொரு கடற்படை நடவடிக்கை

பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் 2019 நவம்பர் 01 ஆம் திகதி மெதவச்சி, ரபேவ பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போது, மதன மோதக கொண்டு சென்ற ஒருவரை கைது செய்தனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த நபரை 40 பக்கற்று மதன மோதகவுடன் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணையின் மூலம், சந்தேக நபர் அப்பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்டார்.சந்தேகநபர் 65 வயதுடைய அனுராதபுர பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் போதைப்பொருட்களும் மெதவச்சி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.

தற்போதைய போதைப்பொருள் தடுப்புத் திட்டத்தின் (எல்.ஏ.சி.பி) ஒத்துழைப்புடன், தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தும் தேசிய பணியை கடற்படை மேற்கொண்டு வருகிறது.