அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கடற்படை 2019 நவம்பர் 01 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கல்லடிச்சேனையிலிருந்து கடலில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கைது செய்துள்ளதனர்.

அதன்படி, கல்லடிச்சேனையிலிருந்து கடல் பகுதியில் ரோந்து சென்றபோது கிழக்கு கடற்படை கட்டளை, அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்களை கைது செய்தது.இதன் போது ஒரு டிங்கி, வெளிப்புற மோட்டார் மற்றும் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையையும் கைப்பற்றியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் 24 முதல் 30 வயதுக்குட்பட்ட கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்./p>

சந்தேக நபர்கள், டிங்கி, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மற்றும் ஓபிஎம் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.