06 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2019 நவம்பர் 4 ஆம் திகதி புத்தலம் பாழவிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 06 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடற்படை கைது செய்தது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை புத்தலம் பாழவிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சில நபர்களை கண்கானித்தனர். அவர்களை மேலும் சோதனை செய்த போது அவர்களிடமிருந்து குறித்த கேரள கஞ்சா பொதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை விற்பனைக்கு தயாராக இருந்தன.

சந்தேகநபர்கள், 23, 30, 35 மற்றும் 38 வயதுடைய, பாழவிய, கந்தான மற்றும் கண்டியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டனர். சந்தேகநபர்களில் ஒரு பெண்ணும் கூட இருக்கின்றதுடன் சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக விசாரணைகளுக்காக புத்தலம் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.