650 வெளிநாட்டு மது பாட்டில்களைக் கொண்ட நபரை கடற்படையால் கைது

650 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் கொண்ட ஒருவர், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் கலால் துறை நடத்திய கூட்டு சோதனையின் போது 2019 நவம்பர் 3 ஆம் திகதி வத்தல பகுதியில் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளை மற்றும் கலால் துறை நடத்திய கூட்டு சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் வண்டி ஒன்று கண்கானிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மோட்டார் வண்டியை சோதனை செய்த போது இந்த மதுபானம் மீட்கப்பட்டது. மோட்டார் வண்டி உரிமையாளர் கடற்படை காவலில் வைக்கப்பட்டதுடன் அவர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்டார். விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட மது பாட்டில்கள் இவ்வாரு கைது செய்யப்பட்டன, மேலும் மோட்டார் வண்டியில் வந்த மூன்று (03) வாங்குபவர்களும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மோட்டார் வண்டி மற்றும் மது பாட்டில்கள் குறித்து மேலதிக விசாரணைகள் கலால் துறையால் நடத்தப்படுகின்றன.